Posts

Showing posts from April, 2012

கதவுதிறக்கும் சொல்லாட்டம்

Image
சொற்களை கொஞ்சம் உரைத்துப் பார்க்கின்றேன். முடிந்தால் கொஞ்சம் 'உரைத்து ஆடலாம்'. சொற்களை நாம்தான் ஆட்டுகிறோம். ஆட்டம் உச்சம்பெறும்போது அவை நம்மை ஆட்டுகின்றன.ஆட்டம் என்ற கலையைத்தான் சொற்களின் மூலம் செய்து பார்க்கிறோமா? இசைகூட உள்ளுடலின் ஆட்டம்தானே. அசைதல்தான் மொழியின் மூலகுணம் என்பதால் ஆட்டத்துக்கு உகந்ததுதான் மொழி.

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

Image
'வழித்து மொட்டையான சவரக்கூட்டில் ஒட்டியிருந்து நேற்று, காதலி முகத்தில் குத்திய முடி சொன்னது - கழிந்து போகிறது காலம் வழிந்து போகிறது வாழ்க்கை என்று. உடல் பிழிந்து நெருப்பு மூட்டித் தீனியாக்கி, மலமாக்கி, அறிவு பொறுக்கி, நாச்சுழற்றி, மந்தம் வெளியேற்றி, மறுத்து, நீண்டு, நீண்டு, சுருங்கிச் சுருங்கி, நீளும் வாழ்க்கையில் எதனைக் கண்டோம்? கனவைத் தவிர!' இவ்வாறு வெறும் கனவைத் தவிர வாழ்க்கையில் வேறு எதனைக் கண்டோம் என்று -'பெருமூச்சோடு' என்ற பெயருடனான - தமது கவிதை ஒன்றில் அன்று அலுத்துக்கொண்ட அதே கவிஞன்தான் - சுமார் ஆறு வருடங்களின் பின்னர், தமது ஆழ்மனக் கனவுகளின் ஒரு கனபரிமாணத்தைத் தொகுத்து 'வேருலகு' என்ற பெயரில் ஒரு குறுநாவலாக இன்று வெளியிடுகின்றார்.