Posts

மாயச் சுவர்

  மதங்கர்துறைப்   ‘ பயல்சுட்டாங்குளத்தின்’   அருகில்தான் அமைந்திருக்கிறது நாடகப்பிட்டி .. குளம் வெட்டிக் குவித்த மண்ணில் கூத்தாடிய காலத்திலிருந்தே தோன்றிற்று அந்தப் பெயர் . நாடகப் பிட்டியில் இப்போது பெரியதொரு பாதிவட்டமாய் அமைந்திருக்கிறது ‘ திருக்குடும்ப அரங்கம் ’. ஒப்பேற்றப்படும் கூத்துக்களை மட்டுமே திரைவிலக்கிக் காட்டும் அந்த அரங்கத்தின் பின்னால் நடக்கும் கூத்துக்களை அனேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மதங்கர்துறையில் ‘ சின்னப்பட்டாணி பிலிப்புப்பிள்ளை ’ என்று பெயரெடுத்த ஒரு அண்ணாவியார் இருந்தார் . ‘ சந்தியோகுமையோர் ’ கோயில் ஆலமரப் பொந்திலிருந்து அவருக்கு ஒரு எழுதுகோல் கிடைத்ததாகவும் , அதையெடுத்து அவர் சந்தியோகுமையோருக்கு பாட்டுக்கட்டியதாகவும் , பின் வந்த காலத்தில் அவர் பல கூத்துக்களை எழுதியதாகவும் கதைகள் உண்டு . மதங்கர் துறைக் கடலில் ‘ திருக்கை மீன்கள் ’ கூட்டம் , கூட்டமாய் வந்து மீனவர்களை அச்சுறுத்தியபோது பிலுப்புப் பிள்ளைதான் மன்றாட்டுப்பாடல் இசைத்து கடலைக் கட்டினாராம் . அதற்கு முன்னர் ‘திருக்கை மீன்கள்’   இந்து ச

ஐயாவின் ஆர்மோனியப் பெட்டி

சிறுவயதில் ‘குப்பாயம்’ கட்டிக்கொண்டு மன்னார்,அரிப்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் போய் ‘சென். பற்றிக்ஸில்’ படித்தவராம் அப்பப்பா. பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வரும் படகுகளை கண்காணிக்கும் அரசு வேலையில் இருந்தபடி, ஆங்கில- தமிழ் மொழிபெயர்பாளராகவும், ஓர் ‘ஆயுர்வேத வைத்தியராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அதன்பின் அரிப்புத்துறையிலேயே   ‘உபதபாலதிபர் ’ வேலையை எடுத்துக்கொண்டு வீட்டின் ஒருபகுதியையே தபாற்கந்த்தோராக மாற்றிக்கொண்டார்.  அவருடைய ஆங்கில அறிவு அவருக்குப் பல முக்கிய அரசியல்வாதிகளின் நட்பைப் பெற்றுக்கொடுத்திருந்ததோடு, ஒரு கைராசியான வைத்தியராகவும், அரிப்புத்துறை தேவாலயத்தின் ‘சங்கித்தன் ’ ஆகவும், அத்தேவாலயத்திலேயே ஆர்மோனியம் வாசிப்பவராகவும் இருந்தார். கேரளாவிலிருந்து வந்த ஒரு வித்தைக்காரரிடம் ‘வர்மக்கலை’ பயின்றார், கிராமத்துக் கலைஞர்களுக்கு ‘வாசகப்பா பயிற்றுவிப்பவராகவும் மன்னாரில் இருந்த யாழ்ப்பாணப்பாங்குக் கூத்துகளைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். தன் ஆயுட்காலத்தில் எவற்றையெல்லாம் கற்றுவிட முடியுமோ அவற்றையெல்லாம் கற்றுவிட வேண்டுமென்ற பேராசையோடு தன் மரணகாலம் வரை க