இன்னுமென்னையே உருக்கி
அன்பே உனை நான் இசைப்பேன்
சொல்லிழந்த பாழ் வெளியில்
அல்லலுற்ற போதினிலும்...

(இன்னுமென்னை.................)

எதனடியில் என் மனது
துயரத்தை வாங்கியது.
எதன் நுனியில் என்னிருப்பு
இப்படியே நெழிகிறது
அன்பென்பது வளரும் வடிவம்
கட்டறுந்து எனில் வளரும்
சிற்றெறும்பு தேனில் விழுந்து
தத்தளித்து நீந்திவரும்

(இன்னுமென்னை.............)

கடந்து செல்லும் மனதினுள்ளே
புள்ளி வைக்கும் குணமெதற்கோ
வைத்தபுள்ளி கடந்து போனால்
வருந்துமிந்த மனம் எதற்கோ
உள் வெளியை உற்றுப் பார்த்தேன்
புள்ளியல்ல பூரணி நீ
எல்லையற்று எனில் பரந்தாய்
பிள்ளையென ஆனேனடி

(இன்னுமென்னை.............)
...........................................................

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)