இல்ஹாம்



முற்கூட்டியே கணித்துக்கொள்ள முடியாத விசித்திரமான புதுநாட்களுள்நாம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிகளேஒருநாள் நம் முன்னே எழுப்பிநிற்கும் கேள்விகளுக்கு எழுந்தமாமாய் பதில் சொல்லியபடியேநகர்கிறோம்.... இப்படியானதொரு புதுநாளில்தான் சாளரத்தின் வெளியேஎட்டிப் பார்க்கிறேன் கொட்டும் பனிக்குள் தலையில்கூட தொப்பிஎதுவுமின்றி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் இல்ஹாம்.இத்தனை ஆண்டுகள் கடந்தபின்னும் அவன் எதற்காக என்னையேபின்தொடர்ந்தபடி இருக்கி றான்என்ற கேள்வியுடனேயே வேலைக்குவெளிக்கிடுகின்றேன்... இல்ஹாம்இல்ஹாம் என்று உதடுகள்உச்சரித்தபடியே இருக்கின்றன.




நான் இல்ஹாமைச் சந்தித்த நாட்களைப் பற்றிபின்வருமாறு உங்களுடன் பேசிக்கொள்ளலாம் என்றுநினைக்கிறேன்.

இலங்கைப் படத்தின் மேல்மூஞ்சியில் இருக்கின்றதுஊர் காவற்றுறை’ என்ற எனது பிரதேசம்சுமார் ஐம்பதுஆண்டு களின் முன்னர் இந்தியாவிலிருந்துகள்ளிக்கோட்டை ஓடுகள்வடக்கன் மாடுகள்போன்றவை இத்துறையால் இறக்கு மதிசெய்யப்பட்டன என்றும் மிகப் பழங்காலத்தில் இங்குவாழ்ந்த மக்கள் கப்பலோட்டிகளாக பலநாடுகளிற்கு வியாபாரத்திற்குச்செல்பவர்களாக இருந்தார்கள் என்றும்எங் கெங்கோ சில வரலாற்றுக்குறிப்புகளில் வாசித்திருக்கிறேன்ஆனாலும் நான் வாழ்ந்த காலத்தில் அந்தகப்பலோட்டிய பரம்பரையினரில் மாதக்கூலிக்கு சிறு தோணிகளை வாங்கிசிறுதொழில் செய்பவர்களாகவே அதிகம்பேர் இருந்தார்கள்..முருகைக்கல்லுக்கு பெயர்போன அந்த இடத்தில் எழுந்து நிற்கும் புராதனக்கடல்கோட்டையின் உள்ளே சென்று பார்க்கும் ஆவல் இருந்தாலும்ஒருபோதும் என்னால் அதனை நெருங்க முடியவில்லைஏனெனில்அங்குதான் பலகால மாய் இலங்கைக் கடற்படை முகாமிட்டிருந்தது.கடற்தொழி லுக்குச் சென்று கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட எனதுநண்பர்கள் வந்து கையால்மடியால் போட்டுச் சொன்ன கதைகளைவைத்தே அக்கடற்கோட்டை பற்றிய என் கற்பனையை யும்வளர்த்துள்ளேன்அத்தோடு பூதத்தம்பி கதை என்றும் அக்கோட்டை சார்ந்தகதைக் கூத்தொன்றிருக்கிறது.

அந்தக்கோட்டையை அண்டி அமைக்கப்பட்டிருந்த கடற்படை முகாமைதாக்கியழிக்க பல இயக்கத்தினரும் முயன்று தோல்வி அடையும்போதெல்லாம் அங்கிருந்து எறிகணை கள் நெருப்புத் துண்டுகளாய் வந்துஎங்கள் கிராமங்களில் விழுவதுண்டுஅப்போதெல்லாம் அக்கோட்டையின்நேரே இருக்கும் ஊருண்டிப் பக்கங்களிலிருந்து இரவிரவாக சனங்கள்எங்கள் கிராமத்திற்கு இடம் பெயர்வதுண்டு .

இல்ஹாம் பற்றி சொல்லத் தொடங்கிய நான் எதோ எனது நகரம்பற்றி கதைஅளக்கின்றேன் என்று நினையாதீர்கள்இத்தகைய ஊர்காவற்றுறையின்கரையோரக் கிராமம் ஒன்றிலிருந்தே என் இடம்பெயர்வு தொடங்குகிறது.

நாங்கள் வாழ்ந்திருந்த தீவுப்பகுதியிலிருந்து யாழ் நகருக்குச் செல்லஒரேயொரு பிரதான வீதியே இருக்கிறது . அந்த வீதியின் பெரிய பாலம்குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட காலத்தில் நாங்கள் யாழ்ப்பாணத் துக்குதப்பிச் செல்ல வேண்டி இருந்ததுஅந்தப் பாலத்திலிருந்து சுமார் மூன்றுமைல் தூரம் சனங்கள் வெளியேறுவதற்காய் நெருங்கி நின்றனர்அந்தநெரிசலை நோக்கியே நாங்களும் நடந்துகொண்டிருந்தோம்வந்து விழுந்தஎறிகணைகளுக்குள் தப்பி கையில் கிடைத் தவற்றை தூக்கிக்கொண்டுசாட்டி’ என்கிற இடத்துக்கு வந்திருந்த போது புலி இயக்கத்தினர் பதுங்குகுழி வெட்டுவதற்கென வாகனங்களில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.அத்தருணத்தில் கண்ணில் எற்றுப்பட்ட அடியேனையும் பிடித்துஏற்றிவிட்டார்கள்அப்போது என்னையும் ஒரு இளந்தாரி என்று கணித்துஏற்றி விட்டார்களே என்று எனக்குள்ளும் ஒரு பெருமை வந்திருந்தது.

ஆனால் என் தந்தையாரோ தருணம் பார்த்து புலிகளின் வாகனத் திலிருந்துஎன்னை இறக்கி பாலத்தின் அருகில் கூட்டி வந்துவிட்டார்உடைந்தபாலத்தைக் கடக்க தண்டவாளக் கம்பிகள் போட்டிருந்தார் கள்அவசரத்தில்அதன் மேல் ஏறியவர்கள் நடுப்பகுதிக்குச் சென்றதும் கடலில் விழுந்தனர்.சிலர் தப்பிச் சென்றனர்அருகிலிருந்த கிராமத்து மீனவர்கள் தோணிகளில்சனங்களை ஏற்றிப் பறித்தனர்நாங்களும் ஒரு தோணியில் ஏறிக் கரைசேர்ந்தோம் .

பாலத்தைக் கடந்ததும் தீவுப்பகுதி மக்கள் சாதிகளாய் பிரிந்து போனார்கள்என்று சிலர் வர்ணிப்பதுண்டுஆனால் நாங்களோ சொந்தங்களையும்,அறிமுகமானவர்களையும் தேடியே சென்றோம்கொழும்புத்துறையில்இருந்த எங்கள் குடும்ப நண்பர் வீட்டுக்கே முதலில் சென்றோம்..

வீடு இருக்கும் தெருவுக்கு சென்றபோது அந்த வீட்டில் அழுகுரல்கள்கேட்டபடி இருந்ததுஎன்ன நடந்ததென விசாரித்ததில் யாரோசெத்திருக்கிறார்கள் என்று ஒருவர் சொன்னார்இன்னொருவரோ கொஞ்சம்விரிவாக ‘இந்த வீட்டில் தீவுப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளை படிப்பதற்காக வந்து நின்றது அந்தப் பிள்ளையின் தம்பியார் இண்டைக்கு செல்விழுந்து செத்துப் போய்ற்றாராம்’ என்று அறியக்கூடியதாக இருந்தது.ஒருகணம் விறைத்துப் போய்விட்டேன் ஏனெனில் அங்கிருந்துபடித்துக்கொண்டிருந்தது எனது அக்காள்அப்படியென்றால்செத்துப்போனதுஆகா மிகுந்த கனம் தங்கிய அடியேன்தான்.

என் செத்தவீடு களைகட்டியிருந்த தருணத்தில் நான் உள் நுழைய என்அக்காள் ‘லாசரு’ என்று குழறியபடி ஓடி வந்து கட்டியழ பிறகென்ன செத்தவீடு ‘கான்சல்’. ஆயினும் செத்தவருக்கான மரியாதை யோடுமுருங்கைக்காய்க் கறியோடு சோறு தின்றுவிட்டு படுக்கைக்குப் போனேன்.இரவிரவாக ஒரே யோசனை ‘ஒரு நாளிற்குள்ளேதான் எத்தனைவிசித்திரமான கணங்கள்’ (இதன் பின்னரும் இரண்டு முறைகள்செத்திருக்கின்றேன்ஒவ்வொருமுறை செத்தபோதும் எனக்கான மரியாதைஉயர்ந்துகொண்டே போனது )
***
கொழும்புத்துறையில் அதிகநாட்கள் இருக்கவில்லைஒரு கிழமை யில்கிளம்பிவிட்டோம்பின்நாட்களில் பல உறவினர்களின் வீடு களில் ஒதுங்கிவந்த எங்களுக்கு நாவாந்துறை சென் நீக்கிலார் கோவிலுக்கு முன்னால்ஒரு வீடு கிடைத்தது . என் தந்தையாரும் அவருடன் நட்புக் கொண்டிருந்தசிந்தாத்துரை’ என்ற மனிதரும் விடுதலைப்புலிகளின் இயக்கஅலுவலகங்களுக்குத் திரிந்து விண்ணப்பித்ததன் பயனாகவே அந்த வீடுகிடைத்தது.

சென் நீக்கிலார் கோயிலில் நாட்டிக் கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தால்தண்ணீர் வருகின்றது என்று சனங்கள் கூடிய ஒருநாளில் மூட்டைமுடிச்சுகளுடன் நாங்களும் குடி புகுந்து கொண்டோம்கோவை வேதசாட்சிகள் காலம்தொட்டு சில்லாலைக் கோவிலுக்கு சமகாலத்தில்உண்டாக்கப்பட்டது இந்தக் கோயில் என்பதாலும்இங்கிருந்த சிம்மாசனம்-போத்துக்கேய கீழைத்தேய மரபுகளை இணைத்துள்ளது என்பதாலும்,சிரத்தையான பக்தியோடு வழிபாடுகள் நடந்துவரும் அந்த ஆலயத்தில்அற்புதங்கள் நடப்பது சாத்தியமே என்றும் வீதிகளில் சிலர் பேசிக்கொண்டுநின்றனர்கொடிமரத்தால் வந்த தண் ணீரை நாக்கில்வைத்துபரிசோதித்தனர்சிலர் சிறிய போத்தல்களில் ஆசிநீர் என்றும்எடுத்துக்கொண்டனர்அருங்குறிகள் பற்றி அயலவர்கள் பேசிக்கொண்டஅந்த நாளில் நாங்களும் குடி புகுந்தோம்.

வாசலில் மல்லிகைப் பந்தலும்வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்ட மதிலும்கொண்ட அந்த வெள்ளை வீட்டில் ‘பஸ்மா’ என்ற ஒரு முஸ்லிம் கிழவி தன்குடும்பத்தோடு வசதியாக வாழ்ந்திருந்ததாகவும்அவர்களுக்குயாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய வியாபார நிலையம் இருந்ததாகவும்,யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டபோதுஅவர்களும் அந்த வீட்டை விட்டுச் சென்றதாகவும் அயல் வீடுகளில் கேட்டுஅறிந்து கொண்டோம்நாங்கள் முதல் முதலாய் அந்த வீட்டுக்குள் காலடிஎடுத்து வைத்தபோது அவசரமான வெளியேற்றத்தில்ஆசைகளிருந்தும்கொண்டுசெல்ல முடியாதவற்றின் கும்பங்கள் பல கிடந்தன...உரிமையாளர்கள் பெருமூச்சுடன் விட்டுப் போன அந்த வீடு எத்தனையோஅலைச்சல்களின் பின் எங்களுக்குக் கிடைத்ததே என்ற ஆறுதலில்பெருமூச்சு விட்டபடியே துப்புரவு செய்தார் என் அம்மாஅந்த வீடுமுழுவதும்வித்தியாசமான பெரு மூச்சுகள் அமுங்கிக் கிடந்தனஅன்று இரவுநாங்களும் நீக்கிலாரை துணைக்கழைத்து படுத்தோம்கொடி மரத்தால் நீர்சர்ர்ர் என்று வந்த படியே இருந்தது ...

மறுநாள் விடிந்தெழும்பி முற்றம் துப்புரவாக்கப் போன அம்மாவிளக்குமாத்தை வீசிவிட்டு வந்து அப்பாவை எழுப்பினார் ‘இங்கே இங்கே...ஆரோ வந்து முன்னால நிக்கிறான்ஒருக்கா வந்து பாருங்க ளேன்...’ அப்பாஎழும்பி வரும்போது நெடுத்த பருமனான அந்த மனிதன் நடந்து பிரதானவீதிக்குச் சென்றிருந்தான்... மீண்டும் சில நாட்களின் பின்னர் ஒருநாள் இரவுநான் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது என் முன்னே வந்துநின்றான் அந்த மனிதன்அவன் தன் பெரிய கண்ணை வெட்டாமல் என்னைமுழித்து பார்த்தபடி நின்றான்என் முன்னே ஆஜானுபாகுவாக நின்றஅவனது உருவம் எனக்குள் ஏற்படுத்திய நடுக்கத்தை வெளிக்காட்டாமல்நான் சைக்கிளில் இருந்து இறங்க தலையை ஆட்டியபடியே விலகிச் சென்றான்அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அவனது பெயர் ‘இல்ஹாம்என்றும் நாங்கள் இருந்த வீட்டுக்காரிக்கு மகன் முறை வரக்கூடியவன்என்றும்அறிவு பேதலித்த அவனை கடைசிநேரத்தில் அவர்கள் விட்டுச்சென்றார்கள் என்றும்இயக்கக்காரர் பிடித்து விசாரித்துவிட்டு அவனால்எதுவும் ஆகப்போவதில்லையென்று ஊருக்குள் விட்டுவிட்டார்கள் என்றும்அறியக் கூடியதாக இருந்தது .

ஒருநாள் பின்னேரம் முன்கதவையும் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளேயேவந்துவிட்டான் இல்ஹாம்வீட்டுக்குள் புறங்கைக் கட்டோடு வந்துஉலாத்தியபடியே ஒவ்வொரு அறையையும் நோட்டம் விட்டான்.அம்மாதான் சொன்னார் ஆக்கள் இருக்கிற வீட்டுக்குள்ள என்னகேட்டுக்கேள்வி இல்லாமல்இல்ஹாம் சிரித்தான்பசிக்குது அதுதான்பஸ்மா உம்மாக்கிட்ட வந்தனான்உம்மா எங்கஅம்மா சொன்னார் உம்மாஇல்ல அம்மாதான் இருக்கிறன்சாப்பிடப் போறியோ ...? முகம் சிவந்தகோபத்துடன் உரத்தக்குரலில் ‘பஸ்மா உம்மா’ வீட்டில நீ என்னசெய்துகொண்டிருக்கிறாய்உம்மாவும் அம்மாவும் ஒண்ணா... என்றுகத்தினான்பின்னர் கதவை பெரிய சத்தமாக அடித்தபடி வெளியேறினான்இல்ஹாம்வீடே அமைதியாகக் கிடந்தது....

***
எங்கள் நம்பிக்கைகள் ஒன்றும் வித்தியாசமானவை அல்லஎங்கள்குடும்பம் ஒன்றும் புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டதுமல்ல.அலைந்து களைத்திருந்தோம்சமூகத்தின் பெரும்பாலானவர்களின்நம்பிக்கைகளை எங்கள் நம்பிக்கைகளாகக் கொண்டிருந்தோம்எங்கள்எதிர்காலம் குறித்த ஏக்கங்கள் எங்கள் பெற்றோர்களுக்குள் இருந்தது.அக்காலத்தில் இடம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் உணவுக்கேஅவதிப்படும் நிலையில் வாழ்ந்த நாங்கள் கூப்பன் கடை களில்சந்திக்கும்போது எங்கள் துயரங்களைப் பகிர்ந்துகொள்வோம்எங்கள்கூப்பன்கடைகளும் இடம் மாற்றப்பட்டபடியே இருந்த அந்த நாட்களில்கூப்பன்கடைகளை நோக்கி இடம் பெயர்த்தப்பட்ட பல கிராமங்களைக்கண்டேன்.

அப்போது நான் ‘சைக்கிள் பாரின்’ மேலால் காலைப் போட்டு ஓடும்நிலைக்கு வளர்ந்திருந்தேன்அவசரத்துக்கு அப்பாவின் சட்டையைப்போட்டுக்கொள்வதும்அம்மாவை ஏற்றிக்கொண்டு கூப்பன் கடைக்குச்செல்வதுமாகக் காலம் கடந்தபடி இருந்ததுஒருநாள் நான் நிவாரணஅரிசியை சைக்கிளில் கட்டிக்கொண்டுவர திடீரென்று என் முன்னேஇல்ஹாம்’ வந்து நிற்கசெய்வதறியாத நான் சைக்கிளோடு ஒருவாய்க்காலிற்குள் விழுந்துபோனேன்கொட்டுண்ட அரிசியையும் அள்ளிக்கட்டிக்கொண்டு காலை இழுத்து இழுத்து வீடு சென்ற நான் ‘இல்ஹாமிற்குநல்ல பாடம் கற்பிக்க வேண்டுமென்று கறுவிக் கொண்டேன்மறுநாள் இரவுபஸ்மா உம்மா வீட்டிலிருந்து நாவலர் வீதியால் யாழ் நகருக்குசெல்லும்போது ஒரு சுவரில் இல்ஹாம் கரியால் எவற்றையோஎழுதிக்கொண்டு நிற்க அவனுக்குத் தெரியாமல் அவன் பின்னே சென்ற நான்கையில் கிடைத்த கல்லொன்றால் அவன் மண்டையை உடைத்துவிட்டுத்திரும்பினேன். ‘அல்லா’ என்று அலறியபடி விழுந்த அவனை பின்னர்சிலநாட்கள் நான் காணவில்லை.

எங்கள் வீட்டுக்கு என் தந்தையாருடன் வரும் சிந்தாத்துரை அண்ணர் வரும்போதெல்லாம் பூதத்தம்பி கூத்தை பாடும்படி கேட்பேன்அல்லது பஸ்மாஉம்மா குடும்பம் பற்றி விசாரிப்பேன்யாழ்ப்பாணத்தில் கடை வைத்திருந்தமுதலாளிகள் பலருக்கு சவாலாக இருந்த மனிசன் வெறும் கையோடுதான்போனார்... என்று பெருமூச்சு விடுவார்ஆனாலும் யாழ்ப்பாணத்துமுஸ்லிம்கள் எங்கள் விடு தலைப் போராட்டத்திற்குஇடைஞ்சலானவர்களாகவே இருந்தார்கள் எனும் கருத்தைவலியுறுத்துபவராகவே இருந்தார்.

சிந்தாத்துரை அண்ணர் அடிப்படையில் ஒரு தீவிர புலி ஆதரவாளர்,அத்தோடு தென்மோடிக் கூத்தை எழுதிப் பழக்கும் அண்ணாவி யாராகவும்இருந்தார்புலிகளின் கருத்து நிலைகளை வலுப்படுத்தும் கூத்துகளையும்அவர் மேடை ஏற்றினார்எனது தந்தையார் ஆர்மோனியம் வாசிப்பதில்கெட்டிக்காரராய் இருந்தக் காரணத்தால் அவர்களின் நட்பும்தொடர்ந்திருந்தது.

பல கூத்துகளை எழுதி இயக்கிய சிந்தாத்துரை குருநகர் யாகப்பர் ஆலயம்விமானத் தாக்குதலில் ராணுவத்தினரால் தாக்கி அழிக்கப் பட்ட போது அதில்அகப்பட்டு இறந்து போனார்அவர் இறந்த சில மாதங்களின் பின்னர் மாவீரர்குடும்பத்திற்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ‘பஸ்மா உம்மாவின்வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு மூட்டை முடிச்சுகளுடன் சைக்கிளில்பயணித்துக் கொண்டிருந்தோம்எங்கள் முதுகையே பார்த்தபடி காணியின்வாசல்கட்டில் அமர்ந்திருந்தான் ‘இல்ஹாம்

நாவலர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த என் கண்ணில் அன்று அவன்எழுதிக் கொண்டிருந்த சுவர் ஓர் அருங்குறி போலவே வந்து காட்சி தந்தது.அதில் ‘நாம் எல்லோருமே கடவுளின் பிள்ளைகள்’ என்ற வாசகம் இருந்தது.

முடிந்தது.

(இல்ஹாம் = உள்ளுணர்வு), ( பஸ்மா = புன்முறுவல் )

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)