நெய்தல் நிலப் பெண்டிர் மனப்போக்கு
(தென்மோடிப்பாடல்)
முள்ளிக் காடே முழுமதியே
கண்ணுறங்காதே – மச்சான்
வள்ளம் தள்ளிப் போனகடல்
அலையே பொங்காதே
காற்றுக் கடல் பார்த்துப் போனார்
பாயின் பாகோலே – நீயும்
பக்குவமாய் கூட்டி வந்தால்
பாவை வாழ்வாளே.
ஏனழுதாய் என்மகளே
ஈனச் சொல்லாலே – அடி
ஆழியுந்தன் ஆச்சிமடி
காறி மெல்லாதே
திரையுங் கடல் திண்மங்களே
கரையின் சென்மமாம் – எங்கள்
குமுறலிலிலும், கூத்தினிலும்
கடலின் சாயலாம்
காத்திருப்பின் கணமுனக்கே
காத்திரங் காணாய் – எந்தன்
நெய்தற்குடி பெண்டிர்ப் பூவே
கவத்துவம் பேணாய்
சோகி தூக்கி தாயம் போடு
சுந்தரக்கையால் – உந்தன்
காய் பழமாய் ஆகும் பெண்ணே
சோழகப் பொய்யால்
Comments