Posts

Showing posts from September, 2012

.................................

அருகில்லை, உருவில்லை, அரூபமும் இல்லை நான். ஆணொரு பொருட்டா என்ன..... போர்த்தது, உதிர்த்தது போய்வர இருப்பது நானெனச் சொல்லும் 'நீ ' எனச் சொல்ல நாதியற்றேன். ராட்டினம் சுற்றும் மேலெது? கீழெது? குழந்தைமையும்,பெற்றார்மையும் மோதிக் குப்புற வீழ்கிறேன் - இக்கணம் மேலெது................ கீழெது. ' நான்' எனும் வெற்றிடத்தை நான்கூட நிரப்பவில்லை. 'நீ ' எனச் சொல்ல நாதியற்றேன்.