Posts

Showing posts from November, 2012

பக்காமார்த்தாவின் அற்புதம்

Image
  ‘வேளாங்கன்னி மாதாவி அற்புதங்கள்’ என்று ஊரில் ஒரு இரகசியக் கடிதம் வரும் அக்கடிதத்தை வாசிப்பவர் 7 கடிதங்கள் எழுதவேண்டும்.’எழுதியபலருக்கு அதிஸ்டலாபச் சீட்டெல்லாம் விழுந்திருக்கிறது என்றும்,உதாசீனப் படுத்தியவர்களுக்கு விபத்தெல்லாம் வந்திருக்கிறது என்றும் கடிதத்தில் எழுதியிருக்கும்.   ‘பக்காமார்த்தாவின் அற்புதங்கள்’ என்ற இக்கடிதம் அப்படியானதில்லை. வாசித்துப் பாருங்கள்.                                                   பக்காமார்த்தாவின் அற்புதம்.     நான் இத்தாகூய் நகரத்திலிருந்து வந்திருக்கிறேன்.   என்னுடைய பெயர் ‘பக்காமார்த்தா’ ‘ஆன்மாவின் ஆரோக்கியம்தான்   ஒரு மருத்துவனின் இறுதி இலட்சியம்’ நான் மருத்துவன். ஆன்மாக்களைத் தேடி வந்திருக்கிறேன். இத்தாகூய் நகரத்தில் ‘கிறீன் கவுஸ்’ என்ற மன நல மருத்துவமனையை நான் நடத்திவந்தேன். அதில் சமூகத்தின் எல்லாவிதமான மனநிலைகளையும் கொண்ட பைத்தியங்களையும் பூட்டி வைத்து வைத்தியம் பார்த்தேன். இப்போ இங்கே வந்திருக்கிறேன் இது இன்னொரு இத்தாகூய். குறைந்த பட்சமாய் ஒரு பொதுஉடன்பாட்டு நிலைக்கு வரமுடியாத சமூகமிது. புத்திசீவிகள்,அர