நான் பற்றிய குறிப்புகள்

நான் ஒவ்வொரு நிமிடமும்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்,
ஒவ்வொரு நிமிடமும்
மறந்துகொண்டும் இருக்கிறேன்
இந்த நிமிடத்தின் நினைப்புத்தான்
நான்.
மறதியின் நான் பிரேதம்.
செத்துப்போன என்னை
சில வேளைகளில் உயிர்ப்பிக்கிறேன்
நினைப்பின் அழகே
வாழ்க்கையின் அழகு.

நான் வாழ்க்கையைச் சேமிக்கிறேன்
மரணத்தைத் தாண்டிய ‘நினைப்பில்’
அதனை இருத்தி வைக்கிறேன்
நினைப்பு எனக்கு மட்டும்
சொந்தமானதல்ல……………………………

நினைவில் காலூன்றி
எதிர்பார்ப்புகள் எனக்குளிருந்து
எள முயல்கின்றன
எதிர்பார்ப்புகளின் சுமை
அதிகரிக்கையில்
சேமித்து வைத்த வாழ்க்கை
கொஞ்சம் குறைகிறது.

எனக்குள் அரூபங்கள் இருக்கின்றன
அவற்றுக்குள் மறைந்து கிடக்கிறது
‘மாவாழ்க்கையின் வரைபடம்’
நான் அந்த வரைபடத்தைத் தேடுகிறேன்.

எழுத்துக்களின் வாலில்தான்
இப்போது நிற்கிறேன்
எழுத்துக்கழுக்கு
வரைபடம் தெரியும்.

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)